பஞ்சாப்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குவாடர் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் சீனர்கள் பயணம் செய்த வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதேபோன்று சீனர் ஒருவர் உள்பட 30 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களை மீட்பு படையினர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர்.