உலக செய்திகள்

நெருங்கும் பொதுத் தேர்தல்..! ஜெயில் கைதிகளுக்கு விடுதலை... சிறைச்சாலையின் வெளியே கொண்டாட்டம்

ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜிம்பாப்வே,

ஜிம்பாப்வே நாட்டில் பெரும்பாலான கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் சிறைச்சாலைகளில் இருந்து 5-ல் ஒரு கைதிக்கு பொதுமன்னிப்பு மூலம் விடுதலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 4 ஆயிரத்து 270 கைதிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர். விரைவிலேயே அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதன்மூலம் விடுதலையான கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

விடுதலையான கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து உற்சாகமாக நடனமாடியபடி வெளிவந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு