உலக செய்திகள்

தவறுதலாக நடந்த ஏவுகணைத் தாக்குதல்!

எஸ்தோனியா நாட்டில் போர் ஒத்திகையின்போது ஸ்பெயின் போர் விமானம் ஒன்று தவறுதலாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெற்கு எஸ்தோனியாவில் ஒத்திகை இடம்பெறும் பகுதியில், வானில் இருந்து வானில் தாக்கும் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது.

10 கிலோகிராம் வெடிபொருளைச் சுமந்த அந்த ஏவுகணையால் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.