தெஹ்ரான்,
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு ஜூன் முதல் பதற்ற நிலை காணப்படுகிறது. எந்த நேரமும் போர் நடக்க கூடும் என்ற அச்சம் நிறைந்த சூழல் எழுந்தது.
எனினும், அதனை பேச்சுவார்த்தை வழியே தீர்த்து கொள்ள முடிவாகி உள்ளது. சமீபத்திய ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது உள்நாட்டில் ஈரானியர்கள் பலர் உயிரிழந்தனர். அப்போது டிரம்ப் கடுமையாக எச்சரித்ததும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.