உலக செய்திகள்

கிரீஸ் நாட்டில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பெண்கள் பலி

கிரீஸ் நாட்டில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 பெண்கள் பலியாயினர்.

தினத்தந்தி

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிலோபென்னசி பிராந்தியத்தில் கலமாட்டா என்ற நகரம் உள்ளது. இங்கு ஒரு ஓட்டல் இயங்கி வந்தது. இந்த ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் பலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

அதனை தொடர்ந்து ஓட்டல் முழுவதும் தீ பரவியது. இதனால் பீதியடைந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறினர். எனினும் இந்த கோர விபத்தில் ஓட்டலின் பெண் ஊழியர்கள் 2 பேர் மற்றும் ஓட்டல் உரிமையாளரின் மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்