உலக செய்திகள்

டிரம்பின் பயணம்: ‘இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது’ - அமெரிக்க மந்திரி கருத்து

டிரம்பின் பயணம், இந்தியா மீதான எங்கள் மதிப்பை நிரூபிக்கிறது என்று அமெரிக்க மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியாவில் முதல்முறையாக கடந்த 24, 25-ந்தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பி உள்ளார்.

இந்த பயணத்தை டிரம்ப் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் டிரம்பின் இந்திய பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக இந்த வாரம் மேற்கொண்ட இந்திய பயணமானது, அமெரிக்க, இந்திய கூட்டாண்மைக்கு அமெரிக்கா அளிக்கிற மதிப்பை நிரூபிக்கிறது என கூறி உள்ளார்.

மேலும், ஜனநாயக மரபுகள் நம்மை இணைக்கிறது. இரு தரப்பு நலன்கள் நம்மை பிணைக்கிறது. ஜனாதிபதி டிரம்பின் தலைமையின்கீழ் இந்தியா உடனான உறவு இன்னும் வலுவாக வளரும் எனவும் கூறி உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு