உலக செய்திகள்

துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது

துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினத்தந்தி

இஸ்தான்புல்,

துருக்கி நாட்டில் ஆகேயன் நகரில் இருந்து இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் வந்தது. அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அந்த விமானம் ஈரமாக இருந்த ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டே விலகிச் சென்று மோசமாக தரை இறங்கியது. இதில் அந்த விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் விமானத்தின் உள்பாகங்கள் சேதமடைந்ததுடன், தீப்பிடித்துக் கொண்டது. உடனே அங்கு தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் வேகமாக தரை இறங்கினர். இதில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும், 52 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து