உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு எதிராக, ரஷியாவில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷியாவில் அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
இதுபற்றி புதின் கருத்து தெரிவிக்கையில், தற்போது எங்களிடம் அப்படி ஒரு நிலை இல்லை. அது எங்களிடம் இருக்காது என்று நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, பெரிய அளவிலான வெளிப்புற அச்சுறுத்தல் வந்தால் பயன்படுத்தக்கூடிய பிற சிறப்பு அவசர நிலைகள் உள்ளன. ஆனால் அவற்றை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.