கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிரிட்டன் இளவரசருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று.!

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

லண்டன்,

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று காலை கொரோனா பறிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இளவரசர் சார்லஸ் ஏற்கெனவே கடந்த மார்ச் 2020-ல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.