உலக செய்திகள்

மோசூல் மசூதி இடிப்பிற்கு அமெரிக்க தளபதி கண்டனம்

அமெரிக்க ராணுவ தளபதி ஐஎஸ் இயக்கம் மசூதியை இடித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

ஈராக்கின் மோசூல் நகரில் இருக்கும் பிரபல அல் நூரி மசூதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தரைமட்டமாகியதாக கூறப்படுகிறது. மசூதியையும் அதன் கோபுரங்களையும் இடித்திருப்பது மோசூல் நகருக்கும், ஈராக்கிற்கும் எதிரான குற்றமாகும். இதற்கான பொறுப்பை ஐஎஸ் இயக்கமே முழுமையாக ஏற்க வேண்டும் என்று கூறினார் ஜோசஃப் மார்ட்டின் எனும் ராணுவ தளபதி.

இந்த மசூதியிலிருந்துதான் 2014 ஆம் ஆண்டில் ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் பக்தாதி காலிஃபா அமைக்கப்பட்டதாக அறிவித்தார். மோசூல் நகரை முழுமையாக கைப்பற்றிய ஈராக் படைகள் மசூதியை நெருங்கிய சமயத்தில் பெரிய வெடிப்பில் மசூதி இடிந்து விழுந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் ஐ எஸ் இயக்கமோ அமெரிக்க விமான தாக்குதலிலேயே மசூதி தகர்ந்ததாக கூறுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை