உலக செய்திகள்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது.

உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும்விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT