உலக செய்திகள்

அமெரிக்க வெளியுறவு மந்திரி அடுத்த வாரம் இந்தியா வருகிறார்

அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

தினத்தந்தி

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று கூறுகையில், டெல்லியில் வருகிற 28-ந் தேதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார்.

அப்போது, கொரோனா தொடர்பான தொடர்ந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பான இருதரப்பு நலன்கள் ஆகியற்றுடன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாகவும் பிளிங்கன் விவாதிப்பார்.அவர் அன்றைய தினமே டெல்லியில் இருந்து குவைத் சிட்டிக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு அவர் குவைத் உயர் அதிகாரிகளுடன் பேசுவார். பின்னர் அவர் 29-ந் தேதி வாஷிங்டன் திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்