வாஷிங்டன்,
கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா ரஷியாவின் செயல்களுக்கு கடுமையான விளைவுகள் இருக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும், கிழக்கு உக்ரைன் எல்லையில், ரஷிய படைகளின் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உக்ரைன் மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன், புலனாய்வு தகவல்களை பகிர்ந்து வருகிறோம். அவற்றின் அடிப்படையில், ரஷியாவுக்கு எதிராக நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான கொள்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் மறு ஆய்வு செய்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளளார்.