Image Courtesy: AFP 
உலக செய்திகள்

ரஷியா மீதான பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை - உக்ரைன் அதிபர்

ரஷியா மீதான பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு எதிராக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்த பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை எனவும், ரஷியா மீது மேலும் அதிக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனின் ராணுவ தொழில்துறை வளாகத்தை தாக்கப்போவதாக கூறிய ரஷிய ராணுவ அமைச்சகத்தின் அறிவிப்புக்கு ஒரு உலக தலைவர் கூட எதிர்வினையாற்றுவதை நான் கேட்கவில்லை. ஆக்கிரமிப்பாளரின் துணிச்சல், ரஷியா மீது விதிக்கப்பட்ட தடைகள் போதுமானதாக இல்லை என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும். எனவே மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்