புதுச்சேரி

2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் மோக்கா புயல் காரணமாக இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

தினத்தந்தி

புதுச்சேரி

தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறியதையடுத்து வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். தற்போது உருவாகியுள்ள புயலுக்கு 'மோக்கா' என பெயரிடப்பட உள்ளது. இது மேலும் தீவிர புயலாக மாறி, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில தினங்களில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது