புதுச்சேரி

தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

புதுவை தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுவை தீயணைப்பு நிலையம் வர்த்தக சபைக்கு சொந்தமான குடோனில் இயங்கி வருகிறது. இந்த குடோனின் மேற்கூரை சேதம் ஏற்பட்டதால் சமீபத்தில் மழை பெய்தபோது மழைநீர் அருவிபோல் தீயணைப்பு நிலையத்துக்குள் கொட்டியது. இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இந்தநிலை தொடர்பாக பொதுமக்கள் கடுமையான விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே பலமுறை தீயணைப்புத்துறை கோரிக்கை விடுத்தும் ஏற்கப்படாத நிலையில் வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இன்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், கோட்ட தீயணைப்பு அதிகாரி இளங்கோ, நிலைய அதிகாரி முகுந்தன் ஆகியோர் மேற்கூரை சேதங்களை பார்வையிட்டனர்.

மழை பெய்தால் சேதம் ஏற்படாத அளவுக்கு தற்காலிகமாக அதை சரிசெய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் புதிதாக தீயணைப்பு நிலையம் கட்டுவதற்கான இடங்களையும் தேர்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து