மாவட்ட செய்திகள்

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு

பட்டாசு ஆலை விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சதானந்தபுரத்தில் தேசிங்குராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆதிலட்சுமி, செந்தி, முத்துமாரி, சுந்தரபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் ஆதிலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுந்தரபாண்டி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.