ஆன்மிகம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 14-ம் தேதி புஷ்ப யாகம்

கூடை கூடையாக கொண்டுவரப்பட்ட பூக்களால் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நானம் செய்யப்படுகிறது.

திருப்பதி:

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 14-ம் தேதி வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெறுகிறது. இதற்காக 13-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

புஷ்ப யாகத்தன்று காலையில், 9.30 மணி முதல் பகல் 11 மணி வரை கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. அதன்பின்னர், மதியம் 1 மணி முதல் 4 மணி வரை புஷ்ப யாகம் நடைபெறும். கூடை கூடையாக கொண்டுவரப்பட்ட சாமந்தி, குன்னேறு, மொகலி, மல்லிகை, ஜாதிமல்லி, ரோஜா, அல்லி போன்ற பூக்களால் ஸ்நானம் செய்யப்படுகிறது.

பின்னர் மாலையில் கோவிந்தராஜ சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்துடன் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்