ஆன்மிகம்

பகவான் கிருஷ்ணர்- அனுமன் ஒற்றுமைகள்

பகவான் கிருஷ்ணர் கீதா உபதேசத்தை அனுமனின் முன்பாக அர்ச்சுனருக்கு கூறினார்.

தினத்தந்தி

பகவான் மகாவிஷ்ணுவின் ராமாவதாரத்தில் மட்டுமின்றி கிருஷ்ணாவதாரத்திலும் அனுமன் சேவை செய்து பகவானின் பரிபூரண அன்பை பெற்றுள்ளார். பகவான் கிருஷ்ணர் கேட்டுக்கொண்டதற்கிணங்க குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே. அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான், கீதா உபதேசத்தை அர்ச்சுனருக்கு கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. குருசேத்திர போரின்போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதே போல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார்.

பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார். இதேபோல் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர் அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி கோகுல மக்களை காத்து நின்றார். அனுமனோ சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனை காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும் அனுமனுக்கும் இடமுண்டு.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்