ஆன்மிகம்

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.

தினத்தந்தி

திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவமூர்த்தி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

நேற்று இரவு அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் விளக்குகள் ஒளிர, சந்திரசேகர் - அம்பாள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தெப்பக்குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து இந்த உற்சவத்தை கண்டுகளித்தனர். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை