ஆன்மிகம்

வாரம் ஒரு திருமந்திரம்

தினத்தந்தி

திருமந்திர நூலை இயற்றியவர், திருமூலர். இவர் தன்னுடைய மூவாயிரம் ஆண்டு வாழ்நாளில் 3 ஆயிரம் பாடல்கள் நிரம்பிய இந்த நூலை உருவாக்கினார். இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்

கனைகழல் ஈசனைக் காண அரிதாம்

கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்

புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.

விளக்கம்:- சிவபெருமானுடைய திருவடிகளை நினைப்பதும், மெய்ப்பொருளான மந்திரங்களைக் கூறுவதும், ஒலியை எழுப்புகின்ற கால் சிலம்பை அணிந்திருக்கும் சிவபெருமானை காண்பதற்கு துணை செய்பவைகளாகும். அப்படி சிவபெருமானை காண்பதற்காக வழிபாடு செய்பவர்கள், தொடுத்த மலர் மாலையையும், நீரையும் வழிபாட்டுப் பொருட்களாகக் கொள்ள வேண்டும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை