ஆன்மிகம்

உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா- பால்குட ஊர்வலம்

நாளை காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர்.

தினத்தந்தி

உடன்குடி சிவலூர் முத்தாரம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்றுவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் பவனி நடந்தது. இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை கும்பம் திருவீதி உலா நடந்தது.

இன்று (செப்டம்பர் 9) காலை 10 மணிக்கு வில்லிசை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, கும்பம் திருவீதி உலா, இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, முளைப்பாரி எடுத்தல் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு வில்லிசை நடைபெறும்.

நாளை (செப்டம்பர் 10) காலை முளைப்பாரி வைத்து கும்மியடித்து அம்மனை வழிபடுகின்றனர். காலை 10 மணி, இரவு 10 மணிக்கு வில்லிசை, மதியம் 1 மணிக்கு தீபாராதனை கும்பம் திருவீதி உலா நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை மறுநாள் (செப்டம்பர் 11) காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையைத் தொடர்ந்து வரி பிரசாதம் வழங்கப்படும். மாலை 7 மணிக்கு திரைப்பட கச்சேரி நடக்கிறது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை