கண்ணமங்கலம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
அப்போது பேண்டு வாத்தியம் இசை முழங்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர்.