மாவட்ட செய்திகள்

கஞ்சா வைத்திருந்தவர் கைது

சந்தவாசல் அருகே கஞ்சா வைத்திருந்தவர் கைது

ஆரணி

சந்தவாசல் அருகே கேளூர் சந்தைமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சந்தவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கேளூர் சந்தைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செங்குணம் பகுதியை சேர்ந்த ஜான்பாஷா (வயது 25) என்பவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.