மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பூந்தமல்லி,

குத்தம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருளப்பாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சரிவர குடிநீர் கிடைக்காததால் அருகில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் கோரிக்கை மனுவை அலுவலக ஊழியரிடம் அளித்து விட்டு சென்றனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:-