புதுச்சேரி

பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும்

புதுவையில் பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வேலைய்யன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளாக பணி செய்யும் பெண் கண்டக்டர்கள் 12 பேரும், 8 ஆண்டுகளாக பணி செய்யும் தினக்கூலி ஊழியர்கள் 4 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். புதுவையில் இருந்து காரைக்காலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட 4 பேர் தொடர்ந்து புதுவையிலேயே பணி செய்து வருகின்றனர். இதனை முறைப்படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி இன்னும் வழங்கப்படவில்லை. எனவே ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஜூலை மாத சம்பளம் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்