புதுச்சேரி

தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து

காட்டேரிக்குப்பம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளிக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.

திருக்கனூர்

காட்டேரிக்குப்பம் அருகே குமராபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 46). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று குமராபாளையம் சாராயக்கடைக்கு சென்று குடித்தார். அப்போது அங்கு மது குடித்துக்கொண்டிருந்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த மஞ்சினி என்பவருக்கும், வைத்தீஸ்வரனுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சினி, தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் வைத்தீஸ்வரனை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவரது முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின்பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மஞ்சினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு