புதுச்சேரி

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி

காரைக்காலில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.

காரைக்கால்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் சுற்றுலாத்துறையும் இணைந்து பல்வேறு போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி கபடி, பீச் வாலிபால், மணல் சிற்பம், வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் வினாடி-வினா போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் தொடங்கி வைத்து பேசினார். போட்டியில் 11 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சாந்தி, பேராசிரியர் ரேகா ஆகியோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT