மாவட்ட செய்திகள்

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 1,200 டன் ரேஷன் அரிசி வந்தது

நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 1,200 டன் ரேஷன் அரிசி வந்தது

நாமக்கல்:

தஞ்சாவூரில் இருந்து 1,200 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சரக்கு ரெயிலில் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. 24 வேகன்களில் வந்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் 50 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பரமத்திவேலூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் டவுன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.