மும்பை

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 33 பெண்கள் மீட்பு

கிர்காவில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 33 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை, 

மும்பை கிர்காவ் நாவால்கர் ரோடு பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தில் விபசாரம் நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கிருந்த 33 பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஏஜெண்ட், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என சேர்த்து 23 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்