புதுச்சேரி

சாலை மறியல்; 18 பேர் மீது வழக்கு

செல்லூர் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தினத்தந்தி

திருநள்ளாறு

திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி காரைக்கால்-கும்பகோணம் சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். இந்தநிலையில் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ்(20), பாலசந்தர்(53), ஜான்மதியழகன்(28), யோகேஷ்(21), நிரஞ்சன்(19), மணிகண்டன்(20), வீ.மணிகண்டன்(20) சந்துரு(20), மனோகர்20), ஐஸ்வரியா(40), சசி(41), ஜோதி(43), மர்லீஸ்(41), சுதா(41), வனிதா(41) உள்ளிட்ட 12 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 18 பேர் மீது நிரவி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து