அன்னவாசல்
அன்னவாசல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் குளவாய்ப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன்னியக்காடு என்ற இடத்தில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் குளவாய்ப்பட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.