ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லூயிஸ் லாரன்ஸ், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் கல்லுகட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பாரில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து பாரில் பதுக்கி வைத்திருந்த 666 மது பாட்டில்களையும், மது விற்ற பணம் ரூ.8 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், மது பாட்டில்களை விற்றதாக நாகர்கோவில் மீனாட்சிபுரம் பரதர் தெருவை சேர்ந்த சுஜின் (வயது38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.