திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள என்.கல்லுபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). கொத்தனார். இவர் 15 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.