புதுச்சேரி

அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரியில்அக்காள், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுச்சேரி

புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25). நேற்று மாலையில் அங்குள்ள அந்தோணியார் கோவில் அருகில் அதே பகுதியை சேர்ந்த முகேஷ், பிரவீன், மாதவன் ஆகிய 3 பேரும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த ஹரிகரனை, அவர்கள் 3 பேரும், 'உனக்கு என்னடா இங்கு வேலை' என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு, அவரது சகோதரி மோனிகா, மைத்துனர் அய்யப்பன் ஆகியோர் அங்கு ஓடி வந்து தடுத்தனர். அவர்களை முகேஷ் உள்பட 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மோனிகா, அய்யப்பன் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின்பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து முகேஷ், பிரவீன், மாதவன் ஆகிய 3 பேரை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு