அயோத்தி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த பிரமாண்ட விழாவில் பங்கேற்க அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அக்சய் குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் நடிகர் அமிதாப் பச்சன் தனி விமானத்தில் அயோத்தி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரைப்பிரபலங்கள் :
இவர்களில் எத்தனை பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.