தேர்தல் செய்திகள்

ராகுல்காந்தி அறிவித்துள்ள நிதியுதவி ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் சிவகங்கையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழை, எளியோருக்கான ரூ.72 ஆயிரம் நிதியுதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என்றும், நம் கைக்கு வருமா? வராதா? என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்தை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் பேசியதாவது:-

மானம் காத்தவர்கள் மருது பாண்டியர்கள் என்று சொன்னால், அப்படி மானம் காத்த மருது பாண்டியர்களின் வாரிசுகளாகிய நீங்கள் தமிழ்நாட்டின் மானத்தையும், இந்தியாவின் மானத்தையும் காப்பாற்ற வேண்டும். நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடக்கூடிய கார்த்தி சிதம்பரத்தை பற்றி உங்களுக்கு அதிகப்படியாக விளம்பரப்படுத்த தேவையில்லை.

நான் எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று சொன்னால், தமிழ் சமுதாயத்தின் நல்லிணக்கத்தை, நிம்மதியை கெடுக்கக்கூடிய வகையில் பேசுவது, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறுவது, கலவரத்தை நடத்துவதற்கு தூண்டுவது, கலவரத்தை நடத்துவது, பொய்களே பேசிக் கொண்டிருப்பது, அவதூறு மட்டும் பேசிக் கொண்டிருப்பதுதான் எச்.ராஜாவின் தொழிலாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்