image courtesy: screenshot from twitter video  
உலக கோப்பை கால்பந்து - 2022

கத்தாரில் திறந்தவெளி பஸ்சில் அர்ஜென்டினா அணி ஊர்வலம்

உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் திறந்த வெளி பஸ்சில் ஏறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தினத்தந்தி

கத்தார்,

கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.

இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் வெற்றியை கொண்டாட இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் ஸ்டேடியத்தின் வெளியே திறந்த வெளி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அணியின் சீருடையுடன் பஸ்சில் ஏறிய அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அங்குள்ள ரோட்டில் இருபுறமும் திரண்ட ரசிகர்கள் வீரர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி