ஒலிம்பிக் 2024

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி... ஜெய் ஷா அறிவிப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குவதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா