ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்; வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செலே குரோப்பன் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து தீபிகா அதிரடியாக விளையாடி புள்ளிகள் சேர்ப்பில் ஈடுபட்டார். இதில், 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இதேபோன்று மற்றொரு போட்டியில், இந்தியாவின் பஜன் கவுர் மற்றும் இந்தோனேசியாவின் தியாநந்தா சோய்ருனிசா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில், இந்திய வீராங்கனை வெற்றி பெற்றால், அவரை எதிர்த்து தீபிகா விளையாடுவார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து