நாடாளுமன்ற தேர்தல்-2024

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை: ரூ. 4 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயற்சி நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னையில் விருகம்பாக்கம், ஓட்டேரி, சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்