நாடாளுமன்ற தேர்தல்-2024

வடக்கு மும்பை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பியூஷ் கோயல் வேட்புமனு தாக்கல்

வடக்கு மும்பை மக்களவை தொகுதி வேட்பாளர் பியூஷ் கோயல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் வடக்கு மும்பை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல் போட்டியிடுகிறார்.

வடக்கு மும்பை மக்களவை தொகுதிக்கு வரும் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு பியூஷ் கோயல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பியூஷ் கோயல் இன்று பாந்த்ரா தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து