நாடாளுமன்ற தேர்தல்-2024

2-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

அதே போல் ஏப்ரல் 26-ந்தேதி கர்நாடகா, கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 88 தொகுதிகளில் நடைபெறும் இந்த 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 11 மாநிலங்களில் ஏப்ரல் 5-ந்தேதியும், ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 6-ந்தேதியும் நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 8-ந்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து