கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

நாடாளுமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லைக்கு மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, கடலூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, மயிலாடுதுரைக்கு முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, விருதுநகர் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர்.ராமசாமி,

கன்னியாகுமரி முன்னாள் எம்.பி., ராமசுப்பு, கிருஷ்ணகிரி தொகுதிக்கு பொதுச்செயலாளர் தனிகாச்சலம் மற்றும் கோபி, சிவகங்கைக்கு மாநில துணைத் தலைவர் கந்தசாமி, கரூர் தொகுதிக்கு துணைத் தலைவர் தீர்த்தராமன், திருவள்ளூர் தொகுதிக்கு துணைத் தலைவர் இதயதுல்லா மற்றும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து