நாடாளுமன்ற தேர்தல்-2024

'கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர்' - நடிகர் வடிவேலு

கடந்த தேர்தலைவிட இந்த முறை நடைபெறும் தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர் என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு தனது வாக்கினை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர். நமது கருத்தை வாக்கு செலுத்திதான் தெரிவிக்க முடியும். நல்ல கட்சிக்கு நிச்சயம் வாக்கு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்