கிரிக்கெட்

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்றது

14 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றது

தினத்தந்தி

கராச்சி,

குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று காலை பாகிஸ்தான் சென்றடைந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி அங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி கராச்சியில் தொடங்குகிறது. பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க வீரர்களுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை. பாகிஸ்தானிலும் கொரோனா பரிசோதனை நடைமுறை முடிந்ததும் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது