கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: திருவள்ளூர் அணி 3-வது வெற்றி

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், திருவள்ளூர் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தேனியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் திருவள்ளூர்-தேனி மாவட்ட அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆகாஷ் சும்ரா 60 ரன்னும், ராம் அரவிந்த் 49 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தேனி அணி 19.2 ஓவர்களில் 88 ரன்னில் சுருண்டது. இதனால் திருவள்ளூர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருவள்ளூர் அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சேலம் அணி சூப்பர் ஓவரில் தஞ்சாவூரையும், திருவாரூர் அணி சூப்பர் ஓவரில் ராமநாதபுரத்தையும் வீழ்த்தின. மற்ற ஆட்டங்களில் காஞ்சீபுரம், பெரம்பலூர், திருச்சி, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல், கோவை, நாகப்பட்டினம், தூத்துக்குடி அணிகள் வெற்றி பெற்றன.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்