கிரிக்கெட்

2-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 122 ரன்கள் அடித்தார்.

தினத்தந்தி

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் கர்ரன் 79 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 278 ரன் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா சதம் (122 ரன்) அடித்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பதும் நிசங்கா தட்டி சென்றார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து