Image Courtesy: AFP  
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய முன்னணி வீரர் பங்கேற்பது சந்தேகம்...?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் வலி உள்ளதாக அணி நிர்வாகத்திடன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் 3ம் டெஸ்ட் போட்டி மட்டுமின்றி எஞ்சிய தொடரில் இருந்தும் விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை