கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா? கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது.

தினத்தந்தி

மவுன்ட்மாங்கானு,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

முதல் 2 போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஆறுதல் தேடும் வகையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. 2-வது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் விளையாட முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம். அவர்களுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர்களாக களம் காணும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். அதனை அவர்கள் சரியாக செய்தால் இந்திய அணி எழுச்சி பெறும்.

ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 155 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் தொடர்ந்து சிறந்த நிலையில் உள்ளார். லோகேஷ் ராகுல் (92 ரன்கள்), கேப்டன் விராட்கோலி (66 ரன்கள்) ஆகியோரின் ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. பேட்டிங் சொதப்பலை சரிக்கட்ட இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை களம் இறக்கப்படாத ரிஷாப் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு